Monday, October 10, 2016

பெரும்-சிக்கலில்-தோனி-மனைவிழ்-தோனியும்-அதிர்ச்சியில்

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி மீது பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி டெல்லி பொலிஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதில் ,Rhiti MSD Almode Pvt. Ltd என்ற தனியார் நிறுவனம் தொடங்கியதாகவும், அதில் சாக்ஷி தோனி உள்ளிட்ட சிலரும் பங்குதாரர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் டெனிஸ்அரோரா என்பவரும் பங்குதாரர் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவர் சில காரண ங்களுக்காக தனது பங்குகளை விற்க தீர்மானித்த தாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அப்பங்குகளை மேற்கூறிய நிறுவனத்தின் பங்குதார ர்களுக்கே விற்பனை செய்துள்ளார்.

இதற்காக ரூ 11 கோடி தருவதாகசாக்ஷி தோனி உட்பட பங்குதாரர்கள்இணங்கியுள்ளனர். இவர்கள் மொத்த தொகையையும் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதிக்குள் செலுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.

எனினும் இன்று வரை வெறும்2.25 கோடிரூபாவை மட்டுமே அவர்கள் செலுத்தியுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர் டெல்லியில் காவல் நிலையத்தில்,Rhiti MSD Almode Pvt. Ltd  மீது முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்த நிலையில் தோனியின் மனைவியான சாக்ஷி இந்த நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து விலகி ஒரு வருடம் ஆன நிலையில் அவருடைய பெயரும் இந்த மோசடி வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.  

இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்...

Subscribe to get more videos :